கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 386 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 386 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 46 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 94 ஆயிரத்து 355 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 560 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.