விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக விகாரையில் தங்கியிருந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரம பிக்கு கைது –மட்டு ஏறாவூர் புன்னைக்குடா விகாரையில் சம்பவம்

மட்டக்களப்பு ஏறாவூhர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை இன்று புதன்கிழமை (25) கைது செய்துள்ளதாக  ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
பிறமாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கிருந்து படித்து வந்துள்ள நிலையில்; நீண்டகாலமாக பிரதம பிக்கு பாலியல் துஷ;பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான இன்று புதன்கிழமை (25) சிறுவன் பொலிசாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனைய:த்து குறித்த பிக்குவை கைது செய்ததுடன் சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் கைது செய்த பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.