கொரோனா தொற்றினால் யாழில் மேலும் 5 பேர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 5 பேரின் சடலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த யாழ்ப்பாணம் மருதடி லேனைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் சங்கானையைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர்.

இதனையடுத்து, யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேஸன் கூறியுள்ளார்.

இதனையடுத்து, மாவட்டத்தில் இதுவரையில், 10 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 3 ஆயிரத்து 686 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 548 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.