இடமாற்றம் பெற்று வந்த புதிய பிரதேச செயலாளர்களுக்கு நேரில் சென்று வாழ்த்திய முக்கியஸ்தர்கள் !!

அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு கடந்த புதன்கிழமை (25) முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ எம் லத்தீப்  நிந்தவூர் பிரதேச செயலாளராகவும், நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ எம் எம் அன்ஷார் (நளீமி) அக்கரைப்பற்று பிரதேச செயலாளராகவும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம் எஸ் எம் றஸ்ஸான் (நளீமி) இறக்காமம் பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு புதன்கிழமை காலை தத்தமது அலுவலகங்களில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர்.

இவர்களை பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் இவ்வேளையில் அரச அதிகாரிகளுடன் நெருக்கமான உறவை எப்போதும் பேணிவரும் அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தன்னுடைய வாழ்த்துக்களை அவர்களின் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று எத்திவைத்தார். இந்நிகழ்வுகளில் ஏனைய பிரதேச செயலகங்களில் முக்கிய பொறுப்புக்களில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.