நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய அரசியல் தலைவர் மங்கள சமரவீர-ப.உதயராசா!

நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய அரசியல் தலைவர் மங்கள சமரவீர என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தெரிவித்துள்ளார் மறைந்த முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக ஊடக அறிக்கை ஒன்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் வெளியிட்டுள்ளார் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீர இந்த நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய ஒரு நல்ல அரசியல் தலைவர், அவரின் இழப்பு நாட்டின் அனைத்து சமூகங்களுக்குமான இழப்பு. இனவாதிகள் அதிகமுள்ள இந் நாட்டில் மங்கள சமவீர போன்ற தலைவர்களே தேவையானவர்கள். சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளையும் பிரச்சினைகளையும் பெரும்பான்மை சமூகங்களும் அச் சமூகத்தின் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ளாது விட்டால் நாட்டில் ஒரு போதும் அமைதி ஏற்படாது என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த ஒரு அரசியல் தலைவரை நாடு இந்த நேரத்தில் இழந்திருப்பது மிகவும் துரதிஸ்டமானது என்று அவரது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.