ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகள் அதிகரிப்பு!

ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா நோயாளிகள் 936 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 4,347 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

உயிரிழந்த பெரும்பாலான கொரோனா நோயாளிகள் பல்வேறு நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.