சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…

இலங்கையில் தடுப்பூசி வழங்கப்படும் செயல்முறை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல்ல, எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரழிவை கட்டுப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் தேவை என்றும், இப்போது ஆதரவு பெருமளவில் பெறப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழு தடுப்பூசியை விரைவுபடுத்துவது அவசியம் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, அக்கலந்துரையாடலில் குறிப்பிட்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.