21 மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட முகக் கவசம்.

பக்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் வைத்து சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை சிறப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேக்கு முகக்கவசத் தயாரிப்பாளர் சமன் ஹெட்டியாராச்சி தான் தயாரித்த முகக்கவசத்தை வழங்கி வைத்தார்.

பெருங்காயம், சிடார், கறுவாப்பட்டை, பாவட்டை வேர், சிவப்பு வெங்காயம், மரமஞ்சள், வேப்பிலை, கராம்பு, இஞ்சி, பச்சை மஞ்சள் ஆகியவை உட்பட 21 மூலிகைகள் உள்ளடங்கியதாக முகக் கவசத்தை தயாரித்துள்ளதாக சமன் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.