சடுதியாக சரிந்தது கொரோனா தொற்றாளர் தொகை…

நாட்டில் மேலும் 944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 444,130 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் 2,884 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று 3,828 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,060 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 376,216 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 58,729 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் 194 பேர்  உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 9,185 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.