இலங்கையில் கொவிட் இறப்புக்கள் 15 % ஆக அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம்.

இலங்கையில் கொவிட் -19 இறப்புக்கள் 15 % ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஒகஸ்ட் மாத முடிவிற்கு அமைய இது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வாரம் வெளியிட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையானது குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா இறப்புக்களானது வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் இலங்கையில் இறப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா இறப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.