சீனாவின் பிரபல வங்கி கொழும்பில் விரைவில் உதயம்?
சீனா அபிவிருத்தி வங்கியின் வலயத்தின் கிளையொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பதற்காக சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன மக்கள் காங்கிரஸின் குழுத்தலைவரும், சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான லீ ஷன்சுவுடன் நேற்று நடைபெற்ற இணையவழி மூலமாக கலந்துரையாடலில் பஸில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை