ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டம் அமையும் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பங்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டம் அமையும் என
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின்
கீழ் ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை அமைக்கும் “இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்”
வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிப்பளை அம்பிளாந்துறை பகுதியில்
நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின்போது இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் தெரிவித்தார்
கிராமத்தில் வாழும் மக்கள், தமது உற்பத்திப் பொருட்களை இலகுவில் நகர்ப்பகுதிகளுக்கு
கொண்டுசென்று சந்தைப்படுத்தவும் மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத்
தீர்க்கும் வகையிலும் இந்தக் கிராமிய பாலங்கள் அமைக்கும் பணிகளை ஜனாதிபதியின்
சுபீட்சத்தின் நோக்கத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பிரதமரின் தலைமையில், இந்தப்
பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
நாகமுனை பகுதியில் உள்ள பாலத்தின் புணரமைப்பு பணிகளே நேற்று ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளன.
மிக நீண்டகாலமாக மண்முனை மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை பாரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது இதற்கான
தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
படுவான்கரை மக்களின் நலன் கருதி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதான
காரியாலயம் ஒன்றிணையும் கொக்கட்டிச்சோலையில் அமைப்பதற்கான நிதிகளை ஒதுக்கீடு
உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்
அதேவேளை பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க
வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது இவ்வாறான சந்தர்ப்பத்திலும் மக்களின்
மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுத்துள்ளது குறிப்பாக சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவுள்ள
குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளை
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார
பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக
கலந்துகொண்டு பாலத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டிவைத்தார்.

இந்த நிகழ்வில், பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம், பிரதேச சபை
உறுப்பினர் வை.சந்திரமோகன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப
உத்தியோகத்தர்களான த.மனோகரன், பா.மதனராஜ் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்
செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும்
கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.