கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துங்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துங்கள் – அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடங்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துங்கள் – ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி  அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரி குடியரசின் நிதியுதவி பெற்ற கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி  அமைச்சருமான  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  திட்ட பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கெட்டம்பேயில் மேம்பாலம் அமையப்பெறுவதால் பேராதனை-கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் அதே நேரத்தில் 18 வீதிகள் அடையாளம் காணப்பட்டு அகலப்படுத்தப்பட்டு கண்டியில் போக்குவரத்து நெரிசலை போக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் நடவடிக்கையாக நெரிசலான பகுதிகளில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.