இலங்கை வைத்தியர்கள் சபை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை…

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 18ம் திகதிவரை நீடிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சபை கோரியுள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சபைத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

பயணக்கட்டுப்பாடுகளை மிகக் கடுமையான முறையில் செயற்படாவிட்டாலும் தற்போது நடைமுறையியேலே எதிர்வரும் 18 ஆம் திகதிவரை நீடிப்பது சிறந்தாக அமையும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.