நிந்தவூரில் 350 மூடைகள் யூரியா உரம் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன: இருவர் கைது!

எம்பிலிப்பிட்டியிலிருந்து அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்துக்கு அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்தப்பட்ட 350 மூடைகள் யூரியா உரத்தை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை அம்பாறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியதுடன் இருவரைக் கைது சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவுடன் இணைந்து மாவட்ட விசேட புலனாய்வு பிரிவினர் நிந்தவூர் பகுதி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு எம்பிலிப்பிட்டியிலிருந்து வந்த லொறியை சோதனையிட்டபோது அதில் 350 உர மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து லொறி சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ததுடன் 350 உர மூடைகளையும் லொறியையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட யூரியா உரம், லொறி மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.