தெஹிவளையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு: வெளிநாட்டவர்கள் உட்பட 7 பெண்கள், முகாமையாளர் கைது!
இணையத்தில் விளம்பரம் செய்து, தெஹிவளை – ஹில் வீதியில் இயங்கி வந்த் விபசார விடுதியை தெஹிவளை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 5 வெளிநாட்டு பெண்கள் உள்ளிட்ட 7 பெண்களையும், விபசார விடுதியின் முகாமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக இந்த விபசார விடுதி நடத்தி செல்லப்பட்டுள்ளதாகவும் 10 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபாவுக்கு இங்கு பெண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தச் சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட முகாமையாளர் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார், உள்நாட்டு பெண்கள் இருவரும் வெள்ளவத்தை மற்றும் பாணந்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.
வெளிநாட்டு பெண்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து இந்த விபசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை