கருவேப்பங்கேணி நாவலர் வீதி புனரமைப்பு…

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 06ம் வட்டாரம் கருவேப்பங்கேணி நாவலர் வீதி புனரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

வட்டார உறுப்பினர் வே.தவராஜா அவர்களின் முன்மொழிவின் அடிப்படையில் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டில் உள்வாங்கப்பட்ட நிலையில் நேற்யை தினம் இதனை செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது மாநகரை முதல்வர் உட்பட மாநகரசபை உறுப்பினர்களான வே.தவராஜா, சி.ஜெயந்திரகுமார், அ.கிருரஜன் உள்ளிட்டோர் களவிஜயம் மேற்கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டத்தினைப் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.