கொரோனா ஒழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து மற்றுமொருவர் விலகல்…

கொரோனா ஒழிப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்திய நிபுணர் இராஜினாமா செய்துள்ளார்.

நிருவிந்தன வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அசோக் குணரத்னவே இவ்வாறு இராஜினாமா செய்துள்ளார்.

சுமார் ஒன்றரை வருடகாலமாக குறித்த தொழில்நுட்ப குழுவிலிருந்து கொரோனா ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் தொடர்ந்து குறித்த குழுவில் உறுப்பினராக இருப்பதால் எவ்வித பயனும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் குறித்த குழுவின் உறுப்பினர் ஆனந்த விஜய்விக்ரம இராஜினாமா செய்தார்.

விசேட வைத்திய நிபுணரான அவர் கூறுகையில், இந்த தொழில்நுட்ப குழுவின் ஊடாக கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என தெரிவித்து இருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.