கல்முனை பிராந்தியத்தில் டெல்டா அபாயம்: பணிப்பாளர் சுகுணன் எச்சரிக்கை!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகளில் 95 வீதமானவை டெல்டா தொற்றுக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கடந்த 4ஆம் திகதி கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.18 பி.சி.ஆர் மாதிரிகளில் 17 பி.சி.ஆர் மாதிரிகள் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்கும் ஒரு பி.சி.ஆர் பரிசோதனை மாதிரி கொவிட் அல்பா வைரஸ் தொற்றுக்கும் உள்ளாகி உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியதும் மிகவும் அச்சுறுத்தலானதும் என்பதனால் பொதுமக்கள்  நிலைமையைக் கருத்திற்கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்வதோடு, சுகாதார நடைமுறைகளை  இறுக்கமாக பின்பற்றி தடுப்பூசியை முறையாகப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.