இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா…

இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 87 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 483 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 14 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 296 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.