பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் கௌரவ பிரதமரின் ஆலோசகராக பதவி வகிக்கவில்லை.

கெக்கிராவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் கௌரவ பிரதமரின் ஆலோசகராக பதவி வகிப்பதாக  வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

நந்தரதன தேரர் தற்போது கௌரவ பிரதமரின் ஆலோசகராகவோ அல்லது வேறு எந்தவொரு பதவியும் வகிக்கவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.