தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்…

(க.கிஷாந்தன்)

போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி 9 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று (29.09.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி தோட்டத்தில் தோட்ட அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலைமை ஏற்பட்டது. அது கைகலப்பாகவும் மாறியது. இத்தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் தோட்ட அதிகாரிகள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 9 தொழிலாளர்கள் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தோட்ட நிர்வாகமே அடாவடியில் ஈடுபட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதனை சுட்டிக்காட்டியே இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.

” மலசலகூடம் அமைப்பதற்கு கூட தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்குவதில்லை. ஆயிரம் ரூபா சம்பள விடயத்திலும் ஏமாற்றம் இடம்பெறுகின்றது. 6 மாதங்களுக்கு மேலாக நிர்வாகம் அடக்கி ஆள முற்படுகின்றது. இந்நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.” -எனவும் மக்கள் குறிப்பிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.