நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டப்பளம் கிராமத்தில் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.

-காந்தன்-

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டப்பளம் கிராமத்தில் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (01/10/2021) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன், மாவட்ட இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் திரு.ஜெயராஜூ, சிவனருள் பவுண்டேசன் தலைவர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா செயலாளர் திரு.வே.வாமதேவன், பொருளாளர்.திரு.க.ஜனார்த்தனன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர்.

இதன்படி கட்டிட கட்டுமான பணிகள் மற்றும் தளபாட உதவிகளுக்கு ஆறரை இலட்சம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்றிட்டமானது அமரர்.வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் கதிர்காமசேகரன் அவர்களின் ஞாபகார்த்தமாக சிவனருள் பவுண்டேசனால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.