நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பாளை மடத்தடி மீனாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வு….

-காந்தன்-

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பாளை மடத்தடி மீனாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வு இன்றைய தினம் (01/10/2021) வெள்ளிக்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன், மாவட்ட இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் திரு.ஜெயராஜ், ஆலய தாலைவர்,நிர்வாக சபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வில் ஆலய எதிர்கால செயற்பாடுகள் மற்றும் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு நடத்துவதற்கான ஆரம்ப முன்னெடுப்புகள் தொடர்வாக கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக சிறந்த முறையில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.