தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு : 79,804 பேர் கைது?

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 81 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை மொத்தம் 79,804 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் வீதியை கடக்க முயன்ற 274 பேர் திருப்பியனுப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.