யாழ் அச்சுவேலி பகுதியில் வன்முறைக்குழு ஒன்றின் ஆயுதங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் வன்முறைக்குழு ஒன்று தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியானது இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட போது சந்தேகநபர்கள் தப்பித்துச் சென்றுள்ள நிலையில்,ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக அச்சுவேலி பொலிஸார் வலைவீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.