கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 43 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 24 ஆண்களும் 19 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 76 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 77 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் 5 இலட்சத்து 20 ஆயிரத்து 432 பேருக்கு இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.