இறக்காமம் பிரதேச செயலகத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள் !
இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள் புதன் கிழமை இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
உலக ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு முன்பள்ளிப் பாலர் பாடசாலை ஆசியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் உள்ளடங்கிய நூற்களும் மரக்கன்றுகளும் இந்நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் விஷேட அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் கலந்து கொண்டதுடன்
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ். ஸபறுல் ஹசீனா உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி எஸ்.றிஸ்மியா ஜஹான் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை