இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

இந்நிகழ்வானது சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 08.10.2021 இன்று
சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற தலைவர் திரு வே.ஜெயநாதன் தலமையில் இடம்பெற்றதுடன் அறநெறிபாடசாலை மாணவர்களின்
ஓங்காரம்
அஸ்ரோத்திரம்
பஜனை
பூசை நிகழ்வு
மற்றும் மாணவர்களின்
கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன்
சிறப்புசொற்பொழிவினை சைவப்புலவர் திரு யோ.கஜேந்திரா நிகழ்த்தினார். மற்றும் அறங்காவலர் ஒன்றியத்தின் செயலாளர் திரு.எஸ். நந்தேஸ்வரன் இந்து சமய கலாசார உத்தியோகத்தர்,
மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டதுடன் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.