தொல்பொருள் செயற்பாடுகள் யுனெஸ்கோவின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும்…

தொல்பொருள் செயற்பாடுகள் யுனெஸ்கோவின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும்… நோர்வே, நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்களிடம் பா.உ சாணக்கியன் வலியுறுத்தல்

எமது பிரதேசங்களில் தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப் படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நோர்வே, நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நோர்வே, நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்களுடனான சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் மட்டக்களப்பில் நோர்வே உயர்ஸ்தானிகர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் (வுசiநெ துழசயடெi நுளமநனயட), நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் (வுயதெய புழகெபசiதி) ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தேன். இதன்போது நமது மாவட்டத்தை எதிர்காலத்தில் முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் எமது மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மட்டக்களப்பில் நடைபெறும் காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு பிரச்சினை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் கையளிக்கப்பட்டது.

அத்துடன் அவர்களிடம் ஓர் விசேட கோரிக்கை ஒன்றை முன்மொழிந்தேன் அக் கோரிக்கையானது எமது பிரதேசங்களில் தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப் படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ (ருNநுளுஊழு) அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளேன்.  இதன்மூலம் நாம் எதிர்கொள்ளும் சட்ட விரோத காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும். இன்றைய சந்திப்பானது சமகால அரசியல் பரிமாற்றத்துடன் இனிதே முற்றுப்பெற்றது என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.