பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டது

பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மற்றுமாரு கட்டமாக மேலும் சில வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் மேலும் சில வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி10,11,12 மற்றும் 13 ஆகிய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.