மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

நவம்பர் மாதம் தொடக்கம் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வகுப்பு கொள்ளளவில் 50 சதவீதமான மாணவர்களை கொண்டு வகுப்புக்கள் நடாத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டுதல்கள் எதிர்வரும் வாரத்தில் வௌியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.