சுவாமி விபுலானந்த மணி மண்டப நூலகத்திற்கு நூல்களை வழங்கி வைப்பு !

கலாச்சார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் அமைக்கப்பட்ட நூலகத்திற்கு நூல்களை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ் பார்த்தீபன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  நூல்களை வழங்கி வைத்தார்.

மேலும் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டீ .எம். றிம்ஸான் மற்றும் காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும், மேலும் பல முக்கிய பிரமுகர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.