புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர, உயர் தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு…

ஐந்தாம் தர புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடத்துவதற்கான நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று நிலைமையால் 6 மாதங்களின் பின் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக முழுமையாக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது.

இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்ட வணைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2022 பெப்ரவரி 07ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை 2022 மே 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 ஜூன் முதலாம் திகதி வரை நடத்துவதெனவும் புதிய நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.