திங்களன்று பாடசாலைகளின் உயர் வகுப்பு பிரிவுகள் ஆரம்பம் : கல்வி அமைச்சு

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள உயர் வகுப்பு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 10,11,12 மற்றும் 13ஆம் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பரிந்துரை கிடைத்தவுடன், பாடசாலைகளில் கல்விப் பணிகளைத் ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்து, ஆரம்பப் பிரிவின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எனினும் தரம் 6 முதல் தரம் 9 வரையான பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் அந்தத் தரங்களில் கற்கைகளை ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை விடுபட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கி பரீட்சைகளை நடத்த ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.