மண்டைதீவு புனித பேதுருவானர் முன்பள்ளியினை திறந்து வைத்தார் சிறீதரன் எம்.பி

மண்டைதீவு புனித பேதுருவானர் முன்பள்ளியினை இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்றைய தினம் திறந்து வைத்தார்.

மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பங்களிப்பில் குறித்த முன்பள்ளிக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மண்டைதீவு பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனி தாஸ் அருட்சகோதரி மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான சிறீபத்மநாதன் , திருமதி தங்கரானி தேவாலயத்தின் நிர்வாகிகள் , மண்டைதீவு பங்கு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.