குடும்பத்தகராறு;கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை

குடும்பத்தகராறு;கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை
——————————————————————–
மாலிம்படை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடக்குப் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதுடன் அவரது தாயாரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் மாலிம்படை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹரிஷா கிஷாந்தி களுஆராச்சி என்ற 33 வயதுடைய இரண்டரை வயது மகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக நேற்றிரவு 10 மணியளவில் குறித்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
கொலையைச் செய்துவிட்டு சந்தேக நபர் தனது மகளுடன் தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலிம்படை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.