இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் கந்த சஷ்டி முருக நாம பஜனை நிகழ்வு.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் கந்த சஷ்டி முருக நாம பஜனை நிகழ்வானது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் புதன்கிழமை அதாவது 10.11.2021 மாலை 3.20 மணி தொடக்கம் 6.00மணிவரை இடம்பெற்றது.
இந்நிகழ்வானது காரைதீவு பிரதேசசெயலாளர் திரு சி ஜெகராஜன் தலமையில் இடம்பெற்றதுடன் சிறப்பு அதிதிகளாக சுவாமி விபுலாநந்தர் பணிமன்ற தலைவர் திரு வெ.ஜெயநாதன்,அறங்காவலர் ஒன்றிய தலைவர் திரு இரா. குணசிங்கம்
செயலாளர் திரு எஸ்.நந்தேஸ்வரன்,மன்ற உபசெயலாளர் திரு எஸ்.விஜயரெத்தின்,மற்றும் மாவட்டச்செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திரு ந.பிரதாப், காரைதீவு பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சிவராஜா சிவலோஜினி, கல்முனை வடக்ககு இந்து கலாசார உத்யோகத்தர் திருமதி உருத்திரமூர்த்தி கெளசல்யவாணி, திருக்கோவில் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி பிரசாந் சர்மிளா என்போர் கலந்து கொண்டதுடன் காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினர். மற்றும் சகானாகலைக்கூட பஜனை குழுவினரின் முருக நாம பஜனை இடம்பெற்றதுடன் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.