கல்முனை அபிவிருத்தியில் குறைபாடு : நகர மத்தியில் போராட இறங்கினார் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நிஸார் ஜே.பி.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார், இந்த அபிவிருத்தி திட்டமானது வெறும் கண்துடைப்பாக அமைத்துள்ளது. காபட் அல்லது கொங்கிரீட்டை கொண்டு அமைக்கவேண்டிய இந்த பஸ்தரிப்பு நிலையமானது சிறுவர் பூங்காக்களுக்கு பதிக்கப்படும் சீமந்து கற்களை கொண்டு அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த வேலைகளை தற்காலியமாக நிறுத்த.வேண்டும் மேலும் மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவழிக்க யாரையும் அனுமதிக்க முடியாது என்றார். இந்த விடயம் தொடர்பில் உரிய அரச உயரதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் கவனத்தில் எடுத்து மக்களின் பாவனைக்கு நீண்ட நாட்கள் பாவிக்கக்கூடியவாறு இந்த பஸ்நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கல்முனை பொலிஸார் ஆர்பாட்டக்காரர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கலந்துரையாடியதுடன் பொலிஸில் முறையிடுமாறு அறிவுரை வழங்கி களைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டதுடன் அவர்கள் தங்கியிருந்த சுலோகங்களையும் எடுத்து சென்றனர்.
கருத்துக்களேதுமில்லை