நாட்டின் எதிர்காலத்திற்காகவும் மக்களுக்காகவும் அயராது உழைக்கும் அவரது புதல்வர்கள், புதல்வியர்கள் மற்றும் பேரக்குழந்தைகளின் உருவில் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் எம்மத்தியில் வாழ்கின்றார் –

நாட்டின் எதிர்காலத்திற்காகவும் மக்களுக்காகவும் அயராது உழைக்கும் அவரது புதல்வர்கள், புதல்வியர்கள் மற்றும் பேரக்குழந்தைகளின் உருவில் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் எம்மத்தியில் வாழ்கின்றார் என களனிப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் மகேந்திர குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

அலரி மாளிகையில்  ‘நமது கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிர்களின் வாழ்க்கை’ எனும் தலைப்பில் களனி பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் மகேந்திர குணவர்தன அவர்கள் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுரை – 2021 ஆற்றுகையி லேயே இவ்வாறு தெரிவித்தார்.

சியாமோபாலி வங்ஷிக மஹா நிகாயவின் மல்வத்து விகாரை பீடத்தின் அனுநாயக்கர் கலாநிதி நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதசிறி தேரர் தலைமையிலான மஹா சங்கத்தினர் உள்ளிட்ட பிற மதத் தலைவர்களுக்கு நினைவுரையை செவிமடுப்பதற்காக கலந்து கொண்டிருந்தனர்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், ஜனாதிபதியின் பாரியார் திருமதி.அயோமா ராஜபக்ஷ, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கௌரவ அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பசில் ராஜஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, கௌரவ இராஜாங்க அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்களான ரொஷான் குணதிலக, விலீ கமகே, ராஜா கொள்ளுரே, மொஹமட் முஸம்மில் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

முதலில் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அவரது பாரியார் மற்றும் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன், முன்னாள் வலய கல்விப் பணிப்பாளர் ஏ.வீரரத்ன அவர்களும் மலரஞ்சலி செலுத்தினார்.

இதன்போது பெலிஅத்த புவக்தண்டாவ தம்மபால மகளிர் கல்லூரியின் மாணவிகள் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு கீதம் இசைத்தனர்.

டி.ஏ.ராஜபக்ஷ நினைவு கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களினால் சிரேஷ்ட விரிவுரையாளர் மகேந்திர குணவர்தன அவர்களுக்கு நினைவு விரிவுரை பதக்கம் அணிவிக்கப்பட்டு நினைவுரை நிகழ்த்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

‘நமது கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிர்களின் வாழ்க்கை’ எனும் தலைப்பில் களனி பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் மகேந்திர குணவர்தன அவர்கள் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுரை – 2021 ஆற்றுகையில்,
சமூக – பொருளாதார காரணிகளை பொறுத்தே ஒரு தேசத்தின் விதி அமையுமே தவிர, தனிப்பட்ட நபர்களின் செயற்பாட்டின் மூலம் அல்ல என அடிக்கடி கூறப்படும்.

அது எவ்வாறாயினும் தேசத்தின் தலைவிதியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தனிப்பட்ட செயல்களை வரலாற்றில் நாம் பார்த்திருக்கிறோம். விடுதலை புலிகள் அமைப்பிற்கு எதிராக போர் புரிவதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்த வரலாற்று தீர்மானம் அதற்கு சிறந்த மற்றும் அனைவரும் அறிந்த உதாரணமாகும்.

நாம் தலைப்பிற்குள் செல்வோமாயின், தாவர ஊட்டச்சத்துக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையே வலுவான நேரடி தொடர்பு காணப்படுவதால், தாவர ஊட்டச்சத்தில் நுண்ணுயிரிகளின் பங்கு பற்றியே இன்று நான் அதிகம் பேச விரும்புகிறேன். இன்று நமது கவனம் பக்டீரியா மற்றும் பூஞ்சைகள் மீது உள்ளது. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற அனைத்து உயிரினங்களும் மரணத்தின் பின்னர் முலப்பொருட்களாக உக்கிப்போகும்.

பக்டீரியாக்கள் என்பது ஒரு மில்லி லீட்டரில் பத்தில் ஒரு பங்கு அளவை கொண்ட நுண்ணுயிராகும். ஒவ்வொரு கிராம் மண்ணிலும் பில்லியன் கணக்கான பக்டீரியாக்கள் வாழ்கின்றன. பூமியில் தோன்றிய முதல் உயிரினம் பக்டீரியாவாகும். அன்றிலிருந்து கடந்த மூன்றரை பில்லியன் ஆண்டுகளாக மாறிவரும் அனைத்து சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கும் இணங்கி பக்டீரியாக்கள் பாதுகாப்பாக காணப்படுகின்றன.

தாவரங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நைட்ரஜன், பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகும். அதற்கு மேலதிகமாக கல்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகியன கணிசமான அளவு தேவைப்படுகிறது.

இந்த தாவர ஊட்டச்சத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு கனிம ஊட்டச்சத்து என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான சேதனப் பொருட்களில் இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் விவசாயத்தில் சேதனப் பசளையின் பயன்பாடு வெற்றியளித்துள்ளது.

சேதனப் பசளையின் ஊடாக தாவரங்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கின்றதா இல்லையா என்பது தொடர்பில் தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. பல நூற்றாண்டுகளாக சேதனப் பசளையே விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டன. எமது வீட்டுத்தோட்டத்தில் நாட்டிய மிளகாய் செடிக்கு சாணி உரம் அல்லது மக்கிப்போகும் குப்பைகளின் ஊடாக போதிய ஊட்டச்சத்து கிடைத்தது என்பதை நாம் அறிந்திருக்கவில்லையா?
இருப்பினும், போதுமான சேதனப் பொருட்கள் அ;று போனமை தீவிர பிரச்சனையாகும். நைட்ரஜன், பொஸ்பரஸ் மற்றும் கந்தகம் போன்ற குறிப்பிடத்தக்க அளவு ஊட்டச்சத்துக்கள் அனைத்து இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்தும் ஆலைகளின் கழிவுநீரில் உள்ளன. கடற்பாசி சிறந்த நைட்ரஜன் மூலமாகும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நனோ நைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்ஸிஅபடைட்-யூரியாவின் பயன்பாடு, இலங்கை விஞ்ஞானிகளின் குழுவினால் உருவாக்கப்பட்டது. இந்த நவீன முறையின் ஊடாக சேதனப் பசளை பற்றாக்குறையை தீர்க்க முடியும்.

சேதனப் பசளை என்ற சொல்லுக்கு பொதுவான அர்த்தம் மக்கிப்போகும் தாவர மற்றும் விலங்கு பாகங்கள் என்பதால், யூரியா சேதனப் பசளையாக அறியப்படவில்லை என்றாலும், சமூகம் நம்பும் இந்த கருத்துக்கு எதிராக சென்று யூரியா என்பது முற்றிலும் சேதனப் பொருள் என கூறுவது முக்கியமானதாகும் என்று நினைக்கிறேன்.

திரு.டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் எங்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாக இருந்தபோது காலமானார். ஆனால் அவர் உண்மையில் இவ்வுலகை விட்டுச் சென்றாரா என்ற கேள்வி எழுகிறது.

எனது புரிதலுக்கiமைய, அவர் இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காகவும், மக்களின் எதிர்காலத்திற்காகவும், புதிய தலைமுறையின் எதிர்காலத்திற்காகவும் அயராது உழைக்கும் தனது புதல்வர்கள், புதல்வியர்கள் மற்றும் பேரக்குழந்தைகளின் உருவில் நம்மிடையே வாழ்கின்றார் என சிரேஷ்ட விரிவுரையாளர் மகேந்திர குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

கலாநிதி நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதசிறி தேரர்,

டீ.ஏ.ராஜபக்ஷ ஏற்றிய ஒளி இன்று பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை இந்த நாட்டில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஒரு புதிய வளர்ச்சி பாதை தொடங்கியது. உலகமே இலங்கை பற்றி பேச ஆரம்பித்தது. டீ.ஏ.ராஜபக்ஷவுக்கு இது தெரியாவிட்டாலும், அப்போது எடுக்கப்பட்ட சரியான முடிவுகளால் இந்த நாட்டை காப்பாற்ற முடிந்தது என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த கால நடப்புகளை நாம் சரியாக கற்க வேண்டும். இந்நாட்டை ஆண்ட மன்னர்கள் நாட்டின் படையெடுப்புகளை அடக்கினாலும், தமிழ் மக்கள் எமக்கு எதிரிகளாகக் கருதப்படவில்லை. கொரோனா தொற்றுநோய் நிலைக்கு மத்தியில் நாம் ஒரு பேரழிவு காலத்தை கடந்து வருகிறோம். கொரோனா தொற்றுநோயால் எங்களால் பல விடயங்களைச் சாதிக்க முடியாது போனது.

சமூகவியல் கோட்பாடாக இருந்தாலும் சரி, அரசியல் ஆய்வுக் கோட்பாடாக இருந்தாலும் சரி அல்லது பொது அறிவால் நோக்கினாலும் சரி, இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்தால், நம் நாட்டிற்கு சுபீட்சம் ஏற்படும் என்பது எமது நம்பிக்கை.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க அவர்கள்,

கிழக்கு கிருவாபத்துவ மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சந்திரிகா ஏரியை நிர்மாணித்த எமது டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 54ஆவது நினைவு தினமே இன்று. 1935 இல் அவரது சகோதரர் டொன் மேத்யூ ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவிற்கு பின்னர், டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். ரு{ஹணுவின் மக்களின் வலுவான விருப்பத்தின் பேரிலேயே அவர் பாராளுமன்றம் தெரிவானார். டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களை கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் மற்றும் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் வரை ஒரு வளமான சக்தியாக விவரிக்க முடியும். ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இந்த நாட்டை சுதந்திரமான மற்றும் அபிவிருத்தியடைந்த நாடாக உயர்த்துவதற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை பின்பற்றுகின்றனர் என சுமித் விஜேசிங்க அவர்கள் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.ஹர்ஷ விஜேவர்தன, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக, தலைநகர் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு குழுவின் தலைவர் ஜீ.எல்.டப்ளிவ்.சமரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.