முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்!முல்லைத்தீவில் கண்டண போராட்டம்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து இன்று 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அரசியல் பிரமுகர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு நகரப்பகுதியில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகவியலாளர் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் பதாதைகள் தாங்கி, கோசங்கள் எழுப்பப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

குறித்த போராட்டத்தில் சிவகுரு ஆதீன குருமுதல்வர் வேலன்சுவாமிகள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆண்டிஐயா புவனேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், உப தவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், தி.இரவீந்திரன், புதுக்குடி பிரதேச சபை உறுப்பினர்களான கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந்த், முத்துச்சாமி முகுந்தகஜன், வலிவடக்கு பிரதேசசபை உறுப்பின் கஜீவன்தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன், தமிழரசுக்கட்சி செயற்பாட்டாளர் அன்ரனிஜெஜநாதன் பீற்றர் இளஞ்செளியன்  உள்ளிட்டவர்களுடன், முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, ஊடகவியலாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.