அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பாக வெற்றி பெற்று பதங்கங்களை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு…

33 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் அக்கரைப்பற்று கமு/திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பாக 20 வயதின் கீழ்ப்பிரிவில் பங்குபற்றி மாணவர்கள் வெற்றி பெற்று பதங்கங்களை பெற்று இருந்தனர்.

குறித்த போட்டி நிகழ்வுகளில் 20 வயதிற்குற்பட்ட பிரிவில் ஆண்களுக்கான 100 மீட்டர் , 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் N.றுக்சன் வெள்ளிப் பதக்கங்களையும், பெண்களுக்கான உயரம் பாய்தல் மற்றும் 100 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் R.பிதுரக்சனா வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களையும் , ஆண்களுக்கான குண்டு போடுதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் T.டினார்த்தன் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்று இருந்த நிலையில்.

மேற்குறிப்பிட்ட பதக்கங்களை வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  (29) பாடசாலையின் அதிபர் திரு. J. R. டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில்  இடம்பெற்றது.

மேலும் 33 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றிய பிதுரக்சனா மற்றும் றுக்சன் ஆகியவர்கள் இருவரும் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.