சரவணை – நாரந்தனையில் சூழகம் அமைப்பினால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு.

நாவலனின் நிதியுதவியில்  சரவணை-நாரந்தனையில் பாரிய சிரமதான செயற்பாடு
வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடு மூலமாக   வீதி அபிவிருத்தி திணைக்களம் (  RDD )  ஊடாக  2 . 7 கீலோமீற்றர் நீளமான சரவணை – நாரந்தனை வீதியானது இரண்டு கோடி ரூபாய்  முப்பத்திரண்டு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படுகின்றது .
இதற்கமைய வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் தீவகம் வடக்கு பிரதேச செயலாளர்  ஆகியோர்  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு .கருணாகரன் நாவலன் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர் .
அதாவது  மேற்படி வீதியின் அருகாமையில் சூழ்ந்து காணப்படுகின்ற பற்றைகளை  அகற்றி வீதியை அகலப்படுத்தி தருவதற்கு உதவுமாறு  வேண்டுகோள் விடுத்திருந்தனர் . அதற்கமைய சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன்  நாவலனின்  ஏற்பாட்டில்  அவரது சொந்த நிதி இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாயில் ( 250000/ = )  தொடர்ச்சியாக  ஆறுநாட்களாக இவ்வீதியில் பெக்கோ இயந்திரம் ஊடாகவும் , பணியாளர்கள் ஊடாகவும்   சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு முழுமையாக துப்பரவு செய்யப்பட்டுள்ளன . தீவகம் வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. ச .மஞ்சுளாதேவி , சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , கருணாகரன் குணாளன் மற்றும் சமூக ஆர்வலர்களான  சரவணையூர் கிரிதரன் , சரவணை சுபாஸ் ,  ஓய்வுநிலை கிராமசேவகர் சகாதேவன் ஆகியோரும் இச்செயற்பாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.