வாகரை பிரதேச செயலாளராக எந்திரி ஜீ.அருணன் நியமனம்!!

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாகரைப் பிரதேச செயலகத்தில் கடந்த 01.12.2021 ஆந் திகதி புதன்கிழமை இடம்பெற்ற பிரதேச செயலாளருக்கான வரவேற்பினைத் தொடர்ந்து புதிய பிரதேச செயலாளர் தனத பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இதன்போது வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புதிய பிரதேச செயலாளரை  மலர் மாலைகள் அணிவித்து வரவேற்பளித்ததுடன் தமது  வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
புதிய பிரதேச செயலாளரை வரவேற்குமுகமாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச செயலாளர்  தனது கன்னி உரையின்போது  “கடந்தகால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் வாகரைப் பிரதேசத்தினதும், இப்பகுதி மக்களினதும் முன்னேற்றத்திற்காகவும், சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்தும் பொருட்டும் நேர்மையாக தமது கடமையினை மேற்கொள்வேன் எனவும் அதேபோல் இங்கு கடமை புரியும்  உத்தியோகத்தர்கள்  அனைவரும் இப்பிரதேசத்திற்காக தியாக மனப்பான்மையுடன் ஒத்துழைப்பு வழங்கி சேவையாற்ற வேண்டுமெனவும்  கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த பிரதேச செயலகத்திற்கு புதிதாக பிரதேச செயலாளராக பதவியேற்றுள்ள இலங்கை நிருவாக சேவை அதிகாரியான இவர்  ஏற்கனவே காணி ஆணையாளர் திணைக்களத்தின் உதவிக்காணி ஆணையாளராகவும், பொதுத்திறைசேரியின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் உதவி அத்தியட்சராகவும், கிரான், ஆரையம்பதி, பட்டிப்பளை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும் தனது சிறந்த சேவையினை ஆற்றியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.