ஊடகவியலாளர் சுலக்சன் மீதான கொலை அச்சுறுத்தலிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி இது குறித்து தெரிவித்துள்ளதாவது
உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜெயச்சந்திரன் சுலக்ஸன் அவர்களுக்கு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று துப்பாக்கி முனையில் பொலீசாரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்துஇ துப்பாக்கியை நீட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான முறைப்பாட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்க மறுத்துள்ளார். எனினும்
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்தே முறைப்பாட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள ஊஊவுஏ பதிவை பரிசோதிக்குமாறும்இ ஊடகவியலாளரால் மனித உரிமைகள் ஆணைக்கிழுவின் பிராந்திய இணைப்பாளர் வு.கனகராஜ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி ஊடகவியலாளர் மீதான கொலை அச்சுறுத்தலை வன்மையாக கண்டிக்கின்றோம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.