சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நிறை பார்க்கும் இயந்திரம் வழங்கிவைப்பு….

சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலைக்கு நிறை பார்க்கும் இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (01) புதன்கிழமை இடம்பெற்றது.

இவ் இயந்திரத்தினை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதித் தலைவர் ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன், கணக்காளர் நாகேந்திரன் உறுப்பினர் குணசேகரம் மற்றும் கல்முனை வைத்தியசாலையின் வைத்தியர் சோ.திருமால் , பிரதான இலிகிதர் அருள்ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.