சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று முன்னெடுப்பு !

நூருல் ஹுதா உமர்

ஆரம்ப சுகாதார அமைப்பு வலுப்படுத்துதல் திட்டத்தின் (PSSP) கீழ் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில்,  கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ எச் மபாஸ், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் பி எம் நஸ்ருதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சமூகத்திற்கான காசநோய் பற்றிய விழிப்புணர்வு  விளக்கக்காட்சிகள்  பல்ஊடக வாயிலாக காண்பிக்கப்பட்டதுடன்,  காசநோய்க்கான சந்தேகத்திற்குரிய நோயாளிகளுக்கான வைத்திய பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் சுவாச நோய் பரிசோதனைக்கான சளி சேகரிப்பு,  மார்பு எக்ஸ்ரே-கதிர் படப்பிடிப்பு பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.