தேசிய மட்ட போட்டிகளுக்கு இறக்காமம் பிரதேச செயலக இளைஞர்கள் தெரிவு !

நூருல் ஹுதா உமர்

2021 ஆம் ஆண்டுக்கான  33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை விளையாட்டு போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று இப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் அடுத்துவரும் தினங்களில் தேசிய ரீதியான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.

33வது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாரை மாவட்ட தடகளப் போட்டி நிகழ்ச்சிகள் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்ற போது இறக்காமம் பிரதேச செயலகம் சார்பாக வீ.சி.மிலான் இளைஞர் கழகம் சார்பக கலந்துகொண்ட எம்.எச். சதாம் அஹமட் (800M) மற்றும் ஏ.எம். ஆசிப் (1500M) ஆகிய வீரர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 33வது இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய ரீதியான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுத் தொடரில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும், பயிற்றுவித்த  இளைஞர் சேவை அதிகாரி ஏ.ஆர். றியாஸ், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல். றஷீன் ஆகியோருக்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றிச் சாதனைபெற நல்லாசிகளையும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.