டயகம ஆக்ரோயாஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – பல கோணங்களில் விசாரணை

(க.கிஷாந்தன்)

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று 06.12.2021 அன்று மாலை மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவத்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய  சாமிநாதன் தங்கேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த டயகம பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.