இறைபதம் அடைந்த மாநகரசபை உறுப்பினர் அமரர் வே.தவராஜா அவர்களுக்கு மாநகரசபை மண்டபத்தில் இறுதி மரியாதை…

(சுமன்)

கடந்த சனிக்கிழமை இயற்கையெய்திய மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினருமாகிய அமரர் வே.தவராஜா அவர்களுக்கு இன்றைய தினம் மாநகரசபை மண்டபத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அன்னாரின் இல்லத்தில் இருந்து பூதவுடல் மாநகரசபை மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்டு மாநகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதன்போது உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளினால் இரங்கல் உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தது.

மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகரசபை பிரதி முதல்வர், உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், அரசியற் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கல்லியன்காடு இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.